எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக கோவில் இணை ஆணையர் நடராஜன் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், இன்று காலை 11 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரசித்தி கோவில்...
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வதால் கோவில் பிரகாரங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு புராதன சிலைகள், வளையல்கள், பொம்மைகள், சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் கடைகளும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளன.
கிழக்கு கோபுர பகுதியில்...
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த வியாபார கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. இதனால் வீரவசந்தராயர் மண்டபம் பகுதியில் இருந்த தூண்கள் பலத்த சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீடியோ பதிவு செய்த தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் நடராஜனிடமும் விசாரணை நடத்தினார்கள்.
துணை முதல்வர் ஆய்வு...
இதற்கிடையில் தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அவர் ஆய்வு செய்தார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதிப்பு இல்லை...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீர வசந்தராயர் மண்டபத்தில் பிளவுபட்டு தொங்கிக் கொண்டிருந்த மேற்கூரை கற்களில் பசுபதீஸ்வரர் சன்னதிக்கு கிழக்கு பக்கம் நான்கு கற்கள் கீழே விழுந்துள்ளது. இதனால் அருகில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதிக்கோ அதன் மேற்கூரையிலோ எந்தவித பாதிப்பும் இல்லை என்று கோவில் கண்காணிப்பாளர் கம்சன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த வியாபார கடைகள்தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று காலைக்குள்...
எனவே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றும் படி கோவில் இணை ஆணையர் நடராஜன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 11 மணிக்குள் கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுநல மனு...
முன்னதாக, குமரியைச் சேர்ந்த வக்கீல் அபுல்கலாம் ஆசாத்சுல்தான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பராம்பரியமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த தீ விபத்து பக்தர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நடந்த தீ விபத்துக்கு குளிர்சாதன வசதி, மின் இணைப்புகள் தான் காரணம். மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் உள்பட சில கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. கோவில்களின் உள்ளே இருக்கும் கடைகளில் ஏற்பட்ட மின்கசிவால் நடந்த விபத்துகள் ஏராளம். எனவே கலாசாரத்தின் அடையாளங்களாக திகழும் கோவில்களின் பழமையை பாதுகாக்கவும், அவற்றின் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதைத் தடுக்கவும், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
12 பேர் கமிட்டி ....
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 12 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள பூக்கடைகளை தவிர பிற கடைகளையும், புதுமண்டபம் பகுதியில் உள்ள 300 கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். வழக்கு விசாரணை வருகிற 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர்...
இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்குமார்பாண்டே தலைமையில், 6 பேர் செவ்வாய்கிழமை அன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதி முழுவதையும் பார்வையிட்டு படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கோவில் இணை கமிஷனர் நடராஜனை சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீ விபத்து குறித்து விசாரித்தனர். நேற்றும் அவர்கள் கோவிலில் ஆய்வுப் பணியை தொடர உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.