முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு எந்தவித ஆர்டர்களும் கொடுக்கவில்லை. இதனால், பட்டாசு ஆலைகள் நிரந்தரமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது என்றும் தடை விதித்தால் சிவகாசியில் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பட்டாசு தயாரிப்புக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் அடுத்த விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து