எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்ஸ்பர்க் : இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். இந்த போட்டியில இந்திய அணி வெற்றிப் பெற்றால் விராட் கோலி தலைமையிலான படை தென்ஆப்பிரிக்க மண்ணில் தொடரை முதலில் கைப்பற்றிய இந்திய அணி என்ற பெருமையை பெறும்.
இந்தியா முன்னிலை...
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 6 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டி முடிந்துள்ளது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் கேப்டவுனில் நடந்த 3-வது போட்டியில் 124 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
4-வது ஒருநாள்...
இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி இன்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவான நிலையில் இருக்கிறது. கேப்டன் விராட்கோலி ரன் எந்திரமாக உள்ளார். அவர் 2 சதம் உள்பட 318 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து தொடக்க வீரர் ஷிகர் தவான் 162 ரன் எடுத்து உள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா இன்னும் சொபிக்கவில்லை. இதனால் அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். ரகானே, பான்ட்யா, டோனி, கேதர் ஜாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
வென்றதில்லை...
பந்துவீச்சில் சுழற்பந்து கூட்டணியான குல்தீப் யாதவ்-சாஹல் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா திணறி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டியில் சாஹல் 11 விக்கெட்டும், குல்தீப் 10 விக்கெட்டு என இருவரும் மட்டுமே 21 விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர். இன்றைய போட்டியிலும் குல்தீப்- சாஹல் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை. முதல் முறையாக தொடரை வெல்ல இந்தியா நல்ல வாய்ப்பு உள்ளது. அதனை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்.
வீரர்கள் காயம்...
தென்ஆப்பிரிக்கா அணி தனது சொந்த மண்ணில் திணறி வருகிறது. கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் காயத்தால் விலகியது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது டிவில்சியர்ஸ் திரும்பி இருப்பது அந்த அணிக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயமாகும். ஆனாலும் முன்னணி பேட்ஸ் மேன்களான ஹசிம் ஆம்லா, டுமிஸ், மார்கிராம், டேவிட் மில்லர் ஆகியோர் ரன் குவிக்க திணறி வருகிறார்கள். குல்தீப்-சாஹல் சுழற்பந்து வீச்சை சமாளித்து எப்படி ரன் எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ், ரபடா, இம்ரான்தாகீர், நிகிடி ஆகியோர் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தொடரை இழக்கும்...
ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வி சந்தித்துள்ள தென்ஆப்பிரிக்கா இன்றைய போட்டியிலும் தோற்றால் தொடரை இழக்கும். தொடரை சமன் செய்ய எஞ்சியுள்ள 3 போட்டியிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இதனால் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இன்று மோதுவது 81-வது போட்டியாகும். இதுவரை நடந்த 80 ஒருநாள் போட்டியில் இந்தியா 32-ல், தென்ஆப்பிரிக்கா 45-ல் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டி முடிவு இல்லை.
இந்திய வீரர்கள்: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர்.
தென்ஆப்பிரிக்கா: மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாகீர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலக்வாயோ, ரபடா, ஷம்சி, ஜோன்டோ, பெஹர்டைன், ஹென்ரிச் கிளாசென்.
முதல் கேப்டன் கோலி...?
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றது கிடையாது. தென்ஆப்பிரிக்க மண்ணில் 4 முறை ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று உள்ளது. இதில் 4 முறையும் தொடரை இழந்தே இருக்கிறது. 1992-ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 5-2 என்ற கணக்கிலும், 2006-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான அணி 5 போட்டி கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கிலும் இழந்தது. டோனி தலைமையில் 2010-ம் ஆண்டு 3-2 (5 போட்டி), 2013-ம் ஆண்டு 2-0 (3 போட்டி) என்ற கணக்கிலும் தொடரை இழந்தது.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் பெருமையை கோலி பெறுவார். மேலும் ஒருநாள் போட்டி தர வரிசையில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்தை பிடிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.