முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனம் சென்றடைந்தார் பிரதமர் : ரமல்லா நகரில் சிறப்பான வரவேற்பு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

Source: provided

ரமல்லா : அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டானில் இருந்து பாலஸ்தீனம் சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு ரமல்லா நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் ஜோர்டான் சென்றார். அந்நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவை சந்தித்த மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜோர்டான் பயணத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து நேற்று காலை தனி விமானத்தில் மோடி பாலஸ்தீனம் சென்றார். பிரதமர் மோடிக்கு ரமல்லா நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் ஒருவர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, தனது பயணம் குறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு 5-ஆவது முறையாகப் பயணம் மேற்கொள்கிறேன். இந்தப் பயணத்தின் மூலம் வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன் என்று மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து