முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று(12.02.2018) நடைபெற்றது.

வீட்டுமனை ப்பட்டா

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 368 மனுக்களை பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7000 மதிப்பில் சக்கர நாற்காலி, ஊன்றுகோல், அடையாள அட்டைகள் உள்பட நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், துணை கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து