முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூக்கடை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      சென்னை

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ரகசிய தகவல்

 இதன் தொடர்ச்சியாக, பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே உள்ள பிளாட் பாரத்தில் கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

அதன்பேரில் மேற்படி இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.அண்ணாமலை, 2.பரசுராம்,உட்பட 8 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, பணம் ரூ.2,700/- மற்றும் 2 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து