முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

போர்ட் பிளேயர்: அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்தமான் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்தமான் தீவுகளில் நேற்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் தீவுகளில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இதன் காரணமாகவே இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஜனவரி 14-ம் தேதி அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து