முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலத்திடியூர் பி.எஸ்.என் கல்லூரியில் தேசிய அளவில் விளையாட்டு எஸ்.பி. அருண் சக்தி குமார் நாளை துவக்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

நெல்லை அருகே மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என்  பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் பிப் 15, 16, 17 ஆகிய  மூன்று நாட்கள் நடக்கிறது.

விளையாட்டு போட்டி

முதல் நாள் (15ந் தேதி) விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் நெல்லை  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைக்கிறார் மேலும்  விழாவில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சுகாதார பணிகள் துணை  இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கர்,  பி.எஸ்.என் கல்வி குழும சட்ட ஆலோசகர் ராமகிருஷ்ணன் , பி எஸ்.என் கல்வி குழும தலைவர் முனைவர் சுயம்பு, தாளாளர் முனைவர்  ருக்மணி சுயம்பு, துணைத் தலைவர்கள் பொறியாளர்  ஆர்.பி.ராஜா, பொறியாளர்  பி.எஸ் ஜெய லட்சுமி ராஜா, பொறியாளர்  பி, எஸ்.ஜெகநாத் , பொறியாளர்  பி.எஸ்.ஜெயராம், செயல் இயக்குநர் தம்பிதுரை, கல்லூரி முதல்வர்கள் பாலக்குமார், சக்திவேல், ரவிக்குமார், தங்கத்துரை ,   உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் முதல் பரிசு ரூ15000 மற்றும் சுழற்கோப்பையும் , இரண்டாம் பரிசு ரூ 10,000  மற்றும் சுழற்கோப்பையும்  மூன்றாம் பரிசு 7000 , 4வது பரிசு ரூ 5000 வழங்கப்படுகிறது. போட்டியில் தேசிய அளவில் பங்கேற்கும் வீரர்கள் , வீராங்கனைகள் அடங்கிய 250 அணிகள் கலந்து கொள்கின்றனர். விளையாட்டில் பங்கேற்க வருகை தரும் வீரர்கள், வீராங்கனை களுக்கு தங்கும் இடவசதி , வாகன வசதி சாப்பாடு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது  இவ்விளையாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரகு , கல்லூரி முதன்மை உடற்கல்வி இயக்குனர்   சிவா, மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள், கல்லூரி நிர்வாகம் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து