எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வைத்தியநாதன்பேட்டை கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் இன்று (15.02.2018) நடைபெற்றது.
மனு நீதி நாள் முகாம்
இம்முகாமில் சட்டப் பணி ஆலோசனைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நக்கீரன் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கலந்து கொண்டு வருவாய்த்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், 26 பயனாளிகளுக்கு விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1,97,000 மதிப்பிலான உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,450 மதிப்பிலான உதவிகளையும், ஆக மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.11,31,450 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் அந்தந்த கிராமங்களுக்கு சென்று அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. முதல் முறையாக தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையக்குழு பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்காக முகாம் அமைத்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் தொடர்பான சட்ட சிக்கல்கள் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நமக்கு தேவையானவற்றை ஆலோசனை பெற்று பயன் பெற்றுக் கொள்ளலாம்.தற்போது நடைபெற்று வரும் வைத்தியநாதன்பேட்டை அரசு பள்ளியானது சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்;டுக்குரியதாகும். மாநில அளவில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற்று நமது தஞ்சாவூர் மாவட்டம் 17வது இடத்தினை பெற்றுள்ளது. வருடாவருடம் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.கிராமப்புற சுகாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்வது போல் நமது சுற்றுப்புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை பெண்களால் மட்டும்; தான் செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மக்கள் நேர் காணல் முகாம் குறித்து அறிவிக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 18 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 மனுக்கள் தகுதியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று பெறப்பட்ட 100 மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு, 15 நாட்களுக்குள் மனு மீது எடுக்கப்பட்ட தீர்வு மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.இம்முகாமையொட்டி செய்தித்துறை, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக்குழு, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ஆகிய துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறு புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், சட்டப் பணி ஆலோசனைக்குழு உறுப்பினர் சார்பு நீதியரசர் சாந்தி, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், பேரூராட்;சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ஜஸ்டின், இணை இயக்குநர் கால்நடைத் துறை இணை இயக்குநர் மாசிலாமணி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரவிச்சந்திரன், பயிற்சி துணை கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், வட்டாட்சியர் லதா, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.