முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பகுதியில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நம்பரில் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆதார் அட்டையால் பரபரப்பு:

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வசித்து வரும் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நம்பர் கொண்ட இரண்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் அட்டை எனப்படுவது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12இலக்க அடையாள எண் கொண்ட அட்டையாகும்.இதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வசித்திடும் அனைத்து மக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுதளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாளத்தின் நோக்கமாகும். இந்தியாவில் இந்த திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரிமாதம் நந்தன்நீல்கேனி என்பவரது தலைமையில் துவக்கப்பட்டது.இதில் கண்ணின் விழித்திரை,கைரேகை,உயிரிஅளவுகள்,முகவரி மற்றும் பல்வேறு புள்ளி விபரங்களுடன் தனித்தன்மை கொண்ட அட்டையாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுமென மத்திய அரசு உறுதியளித்துள்ளது.தற்போது ஆதார் அட்டை இருந்தால் தான் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.இந்த ஆதார் அட்டைகள் அனைத்தும் ஹை-டெக் முறையில் தயார் செய்யப்படுவதாகவும் இதில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் ஏதுமில்லை என்றும் மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் ஹை-டெக் முறையில் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறிவந்த போதிலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த தாய்க்கும் மகளுக்கும் ஒரே நம்பர் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருமங்கலம் தாலுகா கரடிக்கல் அருகேயுள்ள ஜோசியர்ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன்.விவசாயியான இவருக்கு பரமேஸ்வரி(50) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்த பரமனின் குடும்பத்தினருக்கு வந்த ஆதார் அட்டைகளில் தாய் பரமேஸ்வரிக்கும்(அட்டைஎண்:7018 4318 3275) மகள் லெட்சுமிக்கும்(அட்டைஎண்:7018 4318 3275) என்று ஒரே நம்பர் கொண்ட இரு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பரமனின் குடும்பத்தினர் இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் அட்டை எடுக்கும் மையத்தில் கேட்டபோது சரிவர பதில் கிடைக்கவில்லை.
இதனால் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் மாற்றுத்திறன் கொண்ட தனது மகள் லெட்சுமி ஆகியோருக்கு அரசின் நலத்திட்டங்கள்,வங்கி கணக்குகள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆதார் அட்டையினை பயன்படுத்த முடியாமல் பரமனின் குடும்பத்தினர் தவிக்கும்நிலை உருவாகியுள்ளது.மிகவும் பாதுகாப்பானது குறைகள் ஏதும் இல்லாதது நலத்திட்டங்கள் அனைத்திற்கும் தேவையானது என மத்திய அரசினால் புகழப்படும் இந்த ஆதார் அட்டை திட்டத்தில் ஒரே நம்பர் கொண்ட இரு ஆதார் அட்டை வழங்கப்பட்டிருப்பது அதனை தயாரித்திடும் நிறுவனத்தின் கவனக்குறைவை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.எனவே ஆதார் அட்டை தயாரிப்பில் முறையான கவனம் செலுத்துவதுடன் திருமங்கலம் தாலுகாவில் வசித்துவரும் பரமனின் குடும்பத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகளும் ஒரே நம்பரில் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து