முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரிடம் பல முறை பேசியும் நியாயம் கிடைக்கவில்லை : சந்திரபாபு நாயுடு வேதனை

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

அமராவதி : ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமரிடம் பல முறை பேசியும் நியாயம் கிடைக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு துணை நின்றோம். ஆனால், மாநில பிரிவினையால் நஷ்டம் அடைந்த ஆந்திராவை கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது.     -- சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமராவதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது,

மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களைப் போலவேதான் ஆந்திராவுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கான சிறப்பு நிதியை வழங்கக் கோரி 29 முறை டெல்லி சென்றேன். அங்கு பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரை சந்தித்துப் பேசி விட்டேன். ஆனால், நமக்கு நியாயம் கிடைக்கவில்லை.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு துணை நின்றோம். ஆனால், மாநிலப் பிரிவினையால் நஷ்டம் அடைந்த ஆந்திராவை கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது. எனினும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே, மத்திய அரசுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் தொடர்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து