எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பயனாளிகள் 126பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு பதவியேற்று ஓராண்டு ஆனதை கொண்டாடிடும் வகையில் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கினார்.
தமிமிழக அரசின் சார்பில் கிராமப்புறங்களுக்கு நேரிடையாகச் சென்று மக்களின் குறைகளை தீர்த்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் மாநிலம் முழுவதிலும் அம்மா திட்ட முகாம்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் அலப்பலச்சேரி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது.இந்த முகாமிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலை வகித்தார்.திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம் வரவேற்று பேசினார்.ஏராளமான கிராம மக்கள் பங்கேற்ற இந்தமுகாமில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை,நலிந்தோர் உதவித்தொகை,மூன்று சக்கரவாகனம், வீட்டுமனை பட்டா,பட்டா உட்பிரிவு,பட்டா மாற்று,பட்டாநகல்,வேளாண்மை உதவித்தொகை என பயனாளிகள் 126 பேருக்கு ரூ.5.6லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கொடுத்த மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக் கொண்டு அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு ஓராண்டினை நிறைவு செய்ததை கொண்டாடிடும் வகையில் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:அம்மா நம்மை விட்டுச் சென்ற பின்னர் மெஜாரிட்டியான இந்த அரசை காப்பாற்றிட முடியுமா என்று கவலையுடன் இருந்த வேளையில் அம்மாவின் அருளாசியுடன் அம்மாவின் மாணவரான எடப்பாடியார் பொறுப்பேற்று ஓராண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.எதிர்கட்சியினரின் விமர்சனங்களை தாண்டி நிறைகுடம் தழும்பாது என்பது போல் நிதானமாக ஆர்ப்பாட்டமின்றி அம்மாவின் வழியில் வெற்றிகரமாக இந்த ஓராண்டில் அமைந்துள்ள அடித்தளம் இன்றும் 100ஆண்டுகளுக்கு அம்மாவின் அரசு அன்னைத் தமிழகத்தில் சேவை செய்திடும்.ஓராண்டு நிறைவடைந்துள்ள இந்த இனிய நாளை கொண்டாடிடும் வகையில் இங்கே இனிப்பு லட்டு வழங்கப்பட்டுள்ளது.அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றிடும் அரசாக இந்த அரசு திகழ்கிறது.மக்களுக்காக திட்டங்களை இந்திய திருநாட்டில் உருவாக்கி தந்த ஒரே முதலமைச்சராக அம்மா திகழ்ந்தார்கள்.அதில் முதன்மையானது அம்மா திட்டம் தான்.
நிர்வாக புரட்சியை இந்திய திருநாட்டிலே நிகழ்த்திக்காட்டிய ஒரே தலைவி அம்மா தான். கோடான கோடி திட்டங்களை அம்மா தமிழகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.தாய்மார்களின் சிரமத்தை குறைத்திட விலையில்லா பொருட்கள்,தாலிக்கு 8கிராம் தங்கத்துடன் நிதியுதவி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.எந்த மாநிலத்திலும்இது போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் தமிழகத்தை தவிர வேறெங்கும் கிடையாது.உறவினர்கள் அனைவரும் கைவிட்டாலும் அம்மாவின் அரசு மக்களை என்றுமே கைவிடாது.தமிழகத்தில் 30லட்சம் பேருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆயள் முழுதும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்புமிக்க அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. அன்னை தமிழகத்தில் ஏழரை கோடி மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அம்மாவின் அரசு வெளிப்படை தன்மை கொண்டதாக செயல்பட்டு வருகிறது.தமிழகத்தை தடையில்லா மின்சாரம் கொண்ட மின்மிகை மாநிலமாக உருவாக்கி சாதனை படைத்தவர் அம்மா.
அனைத்து தரப்பினரது பேராதரவுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ள அம்மாவின் அரசுஇன்னும் நூறு ஆண்டுகள் உங்களுக்கு சேவை செய்திட வேண்டும்.மக்கள் பணியாற்றி ட வேண்டும்.தற்போது பலர் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு முன்கூட்டியே பதிலளித்திடும் வகையில் தொலைநோக்கு திட்டம் 2023ன் மூலமாக தனிநபர் வருமானத்தை 6மடங்கு உயர்த்தி அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கிட அமைதி,வளம்,வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை அன்னை தமிழகத்திற்கு கொடுத்தவர் அம்மா.பிப்ரவரி 24ம் தேதி 1லட்சம் உழைக்கும் மகளிருடைய கையிலே ஸ்கூட்டியை வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.25ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.அம்மா வழங்கிடும் அந்த ஸ்கூட்டரை தாய்மார்கள் ஓட்டிச்செல்ல இருக்கிறார்கள்.இன்னும் 100ஆண்டுகள் அன்னை தமிழகத்திற்கு சேவையாற்றிட அனைவரும் ஆதரவு தெரிவித்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட சார்புஅணி இணைச் செயலாளர் ஆண்டிசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்.சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லட்சுமி,மற்றும் பல்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.