முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் சகோதரர் தற்கொலை அறிந்த அண்ணன், தம்பியும் மாரடைப்பால் இறந்தனர்

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குஜ்ரான்வாலா பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தற்கொலை செய்தியை அறிந்து அவரது அண்ணனுன், தம்பியும் மாரடைப்பில் பலியான சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா பகுதியில் உள்ள இலியாஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜாகித் அலி (35). இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் அவரது தற்கொலை செய்தி அறிந்த ஜாகித்தின் மூத்த சகோதரரும் இளைய சகோதரரும் மாரடைப்பால் இறந்தனர்.

ஜாகித் அலி தற்கொலை செய்தி கேட்டவுடனேயே அவரது மூத்த சகோதரர் அப்பாஸ் அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து அப்பாஸ் அலியின் உடலும், தற்கொலை செய்துகொண்ட ஜாகித் அலியின் உடலும் ஒருசேர வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அவர்களது உடல்களைப் பார்த்த இளைய சகோதரர் சதாம் அலி (28) மாரடைப்பால் சரிந்து விழுந்து மடிந்தார்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து