எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி: எனக்கு பலவகைகளில் பிரச்னை தர துவங்கினர். நான் இருந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார் என்று தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா குடும்பம் மீது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மறைமுகமாக தாக்கி பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி சையதுகான் தலைமை தாங்கினார். இதில் ஆர்.பார்த்திபன் எம்.பி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் ஒ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்த நாளன்று என்னை பார்க்க வருவதை தொண்டர்கள் தவிர்த்து விட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பார். அதன்படி ஏழை எளியோருக்கு வேஷ்டி சேலை வழங்குதல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பல்வேறு உதவிகள் செய்வது. அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது, அன்னதானம் வழங்குவது, அம்மா நீடுடி வாழ அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பிரார்த்தனை செய்வது என்பது வழக்கம்.
தேனி மாவட்டத்தில் 2014 முதல் இயலாத நிலையில் உள்ள இதய நோயாளிகளுக்கு உதவும் வகையில் இதுவரை 164 பேருக்கு சொந்த செலவில் இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளேன். அனைவரும் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். எம்.ஜி.ஆர் , தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். மேலும் நமது இயக்கத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர்.
அவரது மறைவுக்கு பின் கட்சி சிதைந்து போகும் என்று எதிர்க்கட்சிகள் எண்ணியபோது நான் இருக்கிறேன் என்று நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 28 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து தாங்க முடியாத சோதனைகளை எல்லாம் கடந்து நமது கழகத்தை ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கோட்டையாக உருவாக்கினார். மேலும் 17 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். நமது இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 27 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்யும் அதிகாரத்தை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். தற்போது அம்மா நம்மோடு இல்லை. புரட்சித்தலைவரும், அம்மாவும் என்ன நோக்கத்திற்காக இயக்கத்தை கட்டி காத்தனரோ அந்த நோக்கத்திற்காக தான் தர்மயுத்தம் தொடங்கி அதில் வெற்றி பெற்று இன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றிணைந்து கட்சியையும், ஆட்சியையும் பலப்படுத்தி லட்சியபயணத்தை தொடங்கியிருக்கின்றோம்.
என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது நான்தான் என தினகரன் கூறி வருகிறார். நான் 1980ல் வார்டு பிரதிநிதியாக தொடங்கி பல்வேறு பதவிகளை வகித்து பின்னர் 1996ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நமது கழகத்திற்கு கடும் வீழ்ச்சி இருந்தபோதிலும் 104 நகராட்சிகளில் 8 நகர்மன்ற தலைவர்கள் மட்டுமே நாம் வென்றோம். அதில் நானும் அடங்கும். 1997ல் பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தினகரன் அறிவிக்கப்பட்டு, அவர் பெரியகுளம் வரும் போது தொகுதி முழுவதும் படம் வரைந்து பேனர் வைத்த முதல் நபர் நான்தான். ஆனால் இதுவரை எதற்கும் அவரிடம் பணம் பெற்றதில்லை. உதவியும் கேட்டதில்லை. அந்த தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்தோம். 2004ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, என்னை திருமங்கலம் தொகுதியில் வேலை பார்க்க அனுப்பினார். தினகரன் தோற்றதும் அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை அம்மா வழங்கினார். 2007ல் தினகரனை நீ பாராளுமன்றத்திற்குள் நுழைய கூடாது. தேனி மாவட்டத்திலும் இருக்க கூடாது உடனடியாக கிளம்பி வா என்று உத்தரவிட்டார். அதன்படி அவரும் கிளம்பி விட்டார். பெங்களுர் நீதிமன்றத்தில் அம்மா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் என்னை அழைத்து உடனடியாக சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார். அதன்பின் நத்தம் விஸ்வநாதனை அழைத்து சட்டமன்ற தவைரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்ன போது யாரை என்று கேட்டவுடன் பன்னீர்செல்வம் தான் என அம்மா உடனடியாக சொன்னார். அங்கே இருந்தவர்கள் நம்மை கேட்காமலேயே அறிவிக்கிறாரே என்றும் எனக்கு பலவகைகளில் பிரச்சினை தர துவங்கினர். நான் இருந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார். அப்பிரச்சினைகளை எல்லாம் தாங்கி கொண்டு அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தேன்.
அம்மாவுக்கு எதிராக சதி செய்ததாக கூறி சசிகலா, தினகரன் உட்பட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 16 பேரை நீக்கினார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சேர்த்துக் கொண்டார். மற்றவர்களை உயிரோடு இருக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க விடவில்லை. என்னிடமும் தினகரனிடம் பேசக் கூடாது என்றும், நீங்கள் ஒருவராவது எனக்கு விசுவாசமாக இருங்கள் என்றும் அம்மா கூறினார். அப்போலோ மருத்துவமனையில் அம்மா சிகிச்சையில் இருந்தபோது 38 நாட்களுக்குபின் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அவரை அழைத்து செல்லலாம் என்று அமைச்சர்களிடம் பேசியபோது அப்பல்லோ மருத்துவமனையினர் எங்கள் மீது நம்பிக்கையில்லையா என்றனர். அம்மாவிற்கு ஏதாவது ஒன்றால் தொண்டர்கள் நம் வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றோம். 2016ம் ஆண்டு தேர்தலில் போடி தொகுதியில் எனக்கு சீட்டு தர விடாமல் தடுத்து பார்த்தனர். முடியவில்லை. அதனால் என்னை தோற்கடித்து கட்டிய வேட்டி சட்டையுடன் மீண்டும் டீக் கடையில் அமர வைக்க வேண்டும் என சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டு, அதற்கு தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆகியோர் வேலைபார்த்தனர். ஆனால் தங்கதமிழ்செல்வன், ஜக்கையன், கதிர்காமு ஆகியோருக்கு எனக்கு தேர்தலில் எவ்வளவு செலவு செய்தேனோ அதே அளவு அவர்களுக்கும் செலவு செய்தேன். எனென்றால் கட்சி ஜெயிக்க வேண்டும். நமது முயற்சியில் தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் வென்றோம். நான் யாரையும் மோசம் செய்து சம்பாதிக்கவில்லை. எனது தந்தையிடமும் பணம் வாங்காமல் கடன் வாங்கி டீக்கடை ஆரம்பித்தேன். என்னை அம்மா அமைச்சராக, முதல்வராக, கழக பொருளாளராக நியமித்து அழகுபார்த்தார். நான் அவருக்கு விசுவாசமாக இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை அதனால் நான் போடியில் 67 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தபோது எல்லப்பட்டி முருகன், ரவீந்திரநாத்குமார் ஆகியோரை நீக்கி என்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்க நினைத்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்டாக கருதாமல் இரட்டை இலை இருக்கும் இடத்தில் அ.தி.மு.கவின் சாதாரண, விசுவாச தொண்டனாக இருப்பேன். தர்மயுத்தம் தொடங்கியபோது 12 எம்.எல்.ஏக்கள் என்னோடு வந்தனர். மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தபோது அம்மா உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் கட்சி, ஆட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்ட போது கட்சி பதவி போதும், அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். ஆனால் சக அமைச்சர்கள் நீங்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரிலே அமைச்சராக உள்ளேன். அம்மா பிறந்த நாளான 24ம் தேதி தேனி மாவட்டம் முழுவதும் கட்சியினர் அவரவர் சக்திக்கு தகுந்தவாறு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றி பேசினார்.
ஒன்றிய செயலாளர் கணேசன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி முருகேசன், பெரியகுளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், பெரியகுளம் அன்பு, சந்தோசம், நாராயணன், சிவக்குமார், ராஜவேல், ஏர்செல்ரபீக், காஜாமுயுனுதீன், தேனி ஐயப்பன், பொருளாளர் வீரமணி, போடிநாயக்கனூர் விஜயபாண்டியராஜன் உள்ளிட்ட கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டாகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.