எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செஞ்சூரியன் : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இந்திய அணி தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் அதிக ரன் குவித்து விராட்கோலி முதலிடத்திலும், அதிக விக்கெட் வீழ்த்தி குல்தீப் யாதவ் முதலிடமும் பிடித்தனர்.
அணியில் மாற்றம்...
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. தொடரை ஏற்கனவே வசப்படுத்தி விட்டதால் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். மராட்டியத்தை சேர்ந்த தாகூருக்கு இது 3-வது சர்வதேச போட்டியாகும். தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றமாக டுமினி, டேவிட் மில்லர், ரபடா, ஷம்சி கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர், கயா ஜோன்டோ, பெஹர்டைன் இடம் பிடித்தனர்.
பந்துவீச்சு தேர்வு...
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் ஹசிம் அம்லாவும், கேப்டன் மார்க்ராமும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஷர்துர் தாகூர் வீசிய முதல் ஓவரிலேயே மார்க்ராம் 2 பவுண்டரிகளை ஓடவிட்டார்.
தென் ஆப்பிரிக்கா திணறல்...
அதன் பிறகு இந்திய பவுலர்கள், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அதற்கு ஏற்றார் போல் நமது பீல்டிங்கும் சூப்பராக அமைந்ததால், ரன் சேர்ப்பதில் தடுமாறினர். வேகப்பந்து வீச்சில் பந்து ஓரளவு ஸ்விங்கும் ஆனது. அம்லா (10 ரன், 19 பந்து, 2 பவுண்டரி), தாகூரின் ஓவரில் லெக்சைடு சற்று எழும்பி வந்த பந்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் ஆட வந்தார்.
மிரட்டிய தாகூர் ...
சிறிது நேரத்தில் மார்க்ராம் (24 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார். மார்க்ராம், தாகூர் வீசிய பந்தை விரட்டியடித்த போது, ‘கவர்’ திசையில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் தாவிகுதித்து பிரமாதமாக கேட்ச் செய்தார். முந்தைய இரு ஆட்டங்களில் எளிதான கேட்ச்சுகளை கோட்டை விட்ட அய்யர், இந்த முறை கஷ்டமான கேட்ச்சை பிடித்து வியக்க வைத்தார்.
ஜோன்டோ அதிரடி...
இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், கயா ஜோன்டோவும் ஜோடி போட்டு, அணியை சரிவில் இருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குல்தீப் யாதவின் ஓவரில், டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விளாசினார். ஜோன்டோ 24 ரன்னில் இருந்த போது, சாஹலின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து தப்பிபிழைத்த ஜோன்டோ அதே ஓவரில் இரு சிக்சர்களை தூக்கினார். 19 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை நெருங்குவதற்கு வாய்ப்பு இருப்பது போலவே தெரிந்தது.
அடுத்தடுத்து விக்கெட்...
அணியின் ஸ்கோர் 105 ரன்களாக உயர்ந்த போது, டிவில்லியர்ஸ் (30 ரன், 34 பந்து, 4 பவுண்டரி) சாஹலின் பந்துவீச்சில் சற்று விலகி நின்று அடிக்க முயன்ற போது, அவருக்கு லெக்-ஸ்டம்பு தகர்ந்தது. அதன் பிறகு இந்தியர்களின் பிடி இறுகியதால், தென்ஆப்பிரிக்க வீரர்களின் ரன்வேகம் மந்தமானது. அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 22 ரன்னிலும், பெஹர்டைன் ஒரு ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் 4 ரன்னிலும், தனது முதலாவது அரைசதத்தை எட்டிய ஜோன்டோ 54 ரன்னிலும் (74 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினர். அப்போது அந்த அணி 7 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் (37 ஓவர்) ஊசலாடியது.
205 ரன்கள் இலக்கு...
நெருக்கடிக்கு மத்தியில், கடைசி கட்டத்தில் மோர்னே மோர்கல் (2 சிக்சருடன் 20 ரன்), ஆல்-ரவுண்டர் பெலக்வாயோ (2 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியதால் அந்த அணி ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது.
தென்ஆப்பிரிக்க அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஷர்துர் தாகூர் 4 விக்கெட்டுகளும், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
கலக்கிய விராட் கோலி....
அடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (15 ரன்), ஷிகர் தவான் (18 ரன்) இருவரும் நிகிடியின் ‘ஷாட்பிட்ச்’ பந்துக்கு அவுட்டாகினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், ரஹானேவும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்தனர். குறிப்பாக தூண் போல் நிலைகொண்டு தென்ஆப்பிரிக்க பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய கேப்டன் கோலி, மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். அவரை கடைசி வரை தென்ஆப்பிரிக்க வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அமர்க்களப்படுத்திய கோலி தனது 35-வது சதத்தை அடித்தார். நடப்பு தொடரில் 3-வது சதமாகும்.
இந்தியா அபார வெற்றி
இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மலைப்பான வெற்றியை ருசித்தது. கோலி 129 ரன்களுடனும் (96 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்), ரஹானே 34 ரன்களுடனும் (50 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் தனதாக்கி பிரமிப்பூட்டியது. மழையால் பாதிக்கப்பட்ட 4-வது ஒரு நாள் போட்டியில் மட்டும் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டிருந்தது. தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி கைப்பற்றிய முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை கோலி பெற்றார்.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.