முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே தவசிமடையில் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்.- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமடையில் அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல்,திருச்சி,தேனி,மதுரை போன்ற மாவட்டங்கலிருந்து 452 காளைகளும், 300 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர்களுக்கு பிடியில் சிக்காமல் காளைகள் துள்ளி சென்றன. காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.  சைக்கிள்,அண்டா,பேன் கட்டில்,பீரோ, பரிசுகள் வழங்கபட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 8 மாடுபிடி வீரர்களும்,7 பார்வையாளர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். இதில் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம், முன்னாள் நத்தம் தொகுதி அ.தி.மு.க செயலாளர் கண்ணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், நாம் தமிழர்கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து