முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுத்தாளர்கு.காந்தியின் ”மண்வாசம்”நூல்அறிமுகவிழா

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட துணைச்செயலாளர் கு.காந்தி எழுதிய மண்வாசம் என்கின்ற சிறுகதை தொகுப்பை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துனைப்பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் வெளியிட பொறியாளர் பெ.இராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். சென்னை லயோலா கல்லூரியின் மாற்று ஊடகமைய இயக்குனர் முனைவர் பேரா.காளீஸ்வரன் நூலை அறிமுக செய்து பேசினார். இன்றைய காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டி அற்புதமானநூல் ஆகும். பல்வேறு சமூகபிரச்சனைகள் குறித்து ஆழமாக விவாதிக்கிறது. இவருடைய சென்ற சிறுகதை தொகுப்பில் இடம்பெற்ற இறுதிச்சடங்கு என்கின்ற சிறுகதை சர்வதேச அளவில் பேசப்பட்டது. அதுபோல இந்ததொகுப்பில் இடபெறும் கதைகளும் பேசப்படும் என்றுகூறினார். முன்னாதாக மாவட்டத்தலைவர் ஜான்செளந்தர்ராஜ் தலைமை தாங்கினார்இ மாவட்டபொருளாளர் கவிஞர் அசரப்அலி வரவேற்றார்இ மாவட்டச் செயலாளர் வான்தமிழ்இளம்பரிதிஇ திரைப்பட வசனகர்த்தா கவிஞர்கலையரசன்இ முகவைஅழகுடையான்இ ஒய்வுபெற்றவட்டாச்சியர்கதிரேசன்இ திரைப்பட கேமராமேன் நடராஜ் ஆகியோர் வாழ்த்திபேசினர்இ நூல்ஆசிரியர் கு.காந்தி ஏற்புரை வழங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தரவி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து