முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழகில் கைதான குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கசூர் மாவட்டம். அப்பகுதியைச் சேர்ந்த சைனாப் அன்சாரி என்ற சிறுமி கடந்த ஜனவரி 5-ம் தேதி குரான் வகுப்புக்காக சென்றிருந்தபோது கடத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார். சைனாப் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதும், பிறகு படுகொலை செய்யப்பட்டதும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சைனாப்பை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க சுமார் 1,150 டிஎன் ஏ மாதிரிகள் திரட்டப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. வழக்கில் திருப்புமுனையாக சீரியல் கொலைகாரன் என்று அறியப்படும் இம்ரான் அலியை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். விசாரணைகள் நடந்தப்பட்டன.

இந்த நிலையில் விசாரணையின் முடிவில், இம்ரான் அலி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைகள் விதித்து பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த கொலை மற்றும் பலாத்கார வழக்கில் 1 மாதத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து