எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு, போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொடூர குற்றவாளியான தஷ்வந்த் மீதான தீர்ப்பு 19-ம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து தீர்ப்பு வெளியாவதை அடுத்து தஷ்வந்தை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
கடந்த முறை பொதுமக்கள், மாதர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியதால் தீர்ப்பு வெளியாவதை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஹாசினியின் தந்தை உயர்ந்தப்பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் 3 மணிக்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அவரை குற்றவாளி என அறிவித்தார். பின்னர் தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்குவதாக அறிவித்தார். இந்த வழக்கிலும் இதுபோன்ற தண்டனை வழங்காவிட்டால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்று கூறிய நீதிபதி டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, சென்னையை அடுத்த போரூரில் வசித்த தஷ்வந்த், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 7 வயது சிறுமி ஹாசினியை, கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றார். சிறுமி உடலை மறைத்து வைத்துவிட்டு குழந்தையின் பெற்றோருடன் சேர்ந்து தானும் நல்லவன் போல் நடித்து தேடும் பணியில் ஈடுபட்டார். பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அவரது நடத்தையில் சந்தேகமடைந்து போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியபோது தஷ்வந்த் கொலை செய்ததும், சிறுமி உடலை மறைக்க சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று எரித்ததும் தெரியவந்தது. தஷ்வந்த் தனது கொடூரமான செயலால் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.
தஷ்வந்த்தை கைது செய்த போலீஸார், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவித்தது. சிறுமியின் கொலைக்குப் பின்னர் அவமானம் அடைந்த தஷ்வந்தின் பெற்றோர் குன்றத்தூருக்கு தங்கள் வீட்டை மாற்றினர். அங்கு வசித்தபோதுதான் தன் தாயாரையே தஷ்வந்த் கொலை செய்தார். இந்நிலையில் நேற்று ஹாசினி கொலை வழக்கில் மட்டுமே தற்போது தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது தாயை கொலை செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் அதன் தீர்ப்பு விசாரணை முடிந்து தனியாக வரும். இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
தூக்கு மட்டும் அல்ல - 46 வருடங்கள் சிறை தண்டனையும் விதிப்பு
தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும் 46 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
அதாவது ஆள் கடத்தலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மானபங்கம் குற்றத்திற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 வருடங்கள் சிறை மற்றும் மரண தண்டனை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.