எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், நாட்டிலேயே முதல்முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், ரோபோ எந்திரத்தை களம் இறக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
கேரளாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஜென்ரோபாட்டிக்ஸ் ‘தாங்கள் தயாரித்த ரோபோ எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இந்த ரோபோவுக்கு ‘பெருச்சாளி’ என பெயர் வைத்துள்ளது.
இது குறித்து கேரள நீர் ஆணையத்தின் மேலாளர் இயக்குநர் ஏ ஷைனாமோல் கூறுகையில்,
‘ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த ரோபோ பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் முறைப்படி களத்தில் இறக்குகிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. எங்களின் நோக்கம் உள்நாட்டு நிறுவனத்தை ஊக்கப்படுத்துவதுதான். இந்த ரோபோ தயாரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு செய்துள்ளது.
சோதனை முயற்சியாக இந்த ரோபோ எந்திரம் திருவனந்தபுரத்தில் உள்ள 5 ஆயிரம் பாதாளச் சாக்கடையில் இறக்கி சுத்தம் செய்து பார்க்கப்பட்டது. அனைத்தும் சிறப்பாக நடந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
இந்த ரோபோ எந்திரத்தை தயாரித்த ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விமல் கோவிந்த் கூறியதாவது:
9 இளைஞர்கள் கொண்ட குழுதான் இந்த ரோபோ எந்திரத்தை தயாரித்தது. இந்த ரோபோ ‘வை-பை’, ‘புளூடூத்’, மற்றும் ‘கன்ட்ரோல் பேனல்’ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும். இதில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பும், துடுப்பு போன்ற அமைப்பும், கழிவுகளை எளிதாக அள்ளி, சுத்தம் செய்யும். இந்த திட்டத்துக்கு எங்களுக்கு கேரள அரசின் நீர் வாரியம் முழுமையாக நிதி அளித்து ஆதரவு அளித்துள்ளது. குறிப்பாக சுத்தம் செய்தல், பாதாளச்சாக்கடை குழாய்களை சீரமைத்தல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது
நாள்தோறும் கிடைக்கும் ரூ.300 முதல் ரூ.500 கூலிக்காக உயிரை பணயம் வைத்து பாதாளச்சாக்கடையில் இறங்கி விளிம்பு நிலை சமூகத்தில் உள்ள மக்கள் சுத்தம் செய்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கும், மனிதர்களே சாக்கடையை சுத்தம் செய்யும் முறையை மாற்றவும் எங்களின் கண்டுபிடிப்பு உதவும். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பாதாளச்சாக்கடையில் உள்ள 30 கிலோ கழிவுகளை இந்த ரோபா அள்ளியது. அதில் சானிட்டரி நாப்கின், துணிகள், அறுவைசிகிச்சை பிளேடுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், அடுத்த ஒருமணி நேரத்தில் இந்த ரோபா அந்த பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்து முடித்து விட்டது. எந்தவிதமான பாதாளச் சாக்கடையிலும் இதை பயன்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ராஷித் கூறுகையில், ‘பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த எந்திரத்தை இயக்க பயிற்சி அளிக்க இருக்கிறோம். இதை எளிதாகக் கையாளலாம், ‘ரிமோட் கார்’ போல் இயக்கலாம். இப்போது ஆங்கிலத்தில் கட்டளைகளைப் பிறப்பித்து இயக்குகிறோம், விரைவில் பிராந்திய மொழிகளுக்கு ஏற்ப மாற்றலாம். இந்த ரோபோவை தயாரிக்க 8 மாதங்கள் வரை தேவைப்பட்டது. ‘நுமாட்டிக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ இயக்கப்படுகிறது.
இந்த ரோபோ குறித்து அறிந்து இதேபோல் வாங்குவதற்காக தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரா அரசுகளும் எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றன. மேலும் கனடா, இங்கிலாந்து நாடுகளும் எங்களிடம் தகவல் கேட்டுள்ளன.
டெல்லியில் வரும் 22-ம் தேதி நடக்கும் ஸ்வச்பாரத் திட்டத் பயிலரங்கில் இந்த ரோபோ குறித்த செயல்விளக்கம் காட்ட அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மார்ச் 2-ம் தேதி ஆற்றுக்கால் பகவதி கோயில் பொங்கல் தினத்தின்று, இந்த பெருச்சாளி ரோபோவை முறைப்படி களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.