முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடி 25-ம் தேதி புதுவை வருகை

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி : புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த பொன்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 25-ம் தேதி புதுவை வருகிறார்.

ஆரோ பொன்விழா...

புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதன் பொன்விழா வருகிற 24-மற்றும் 25-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பொன்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 25-ம் தேதி புதுவை வருகிறார். அன்று காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வரும் மோடிக்கு அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அரவிந்தர் ஆசிரமம்....

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார். அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதியில் தரிசனம் செய்து மலரஞ்சலி செலுத்துகிறார். மேலும் அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்கிறார். இதன்பின்னர் ஆரோவில் சென்று பொன்விழாவில் பங்கேற்கிறார்.

பொதுக் கூட்டம் ...

இதனைதொடர்ந்து லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் மோடி புதுவை வருகையையொட்டி புதுவை மற்றும் ஆரோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆரோவில்லில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும்பணி நேற்று காலை தொடங்கியது. பாரதியஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கணபதி ஹோமத்துடன் பந்தக்கால் அமைக்கும் பணி நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து