முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா அரசுப் படை தாக்குதல்: பொதுமக்கள் 100 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டுப் பகுதியில் அரசுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 100 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரியா கண்காணிப்பு குழு நேற்று கூறியபோது, சிரியாவில் கிழக்குப் பகுதியில் கவுடா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் 100 பேர் பலியாகினர். அதில் 20 பேர் குழந்தைகள்"என்று கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.இதில் இதுவரை 400,000 பேர் பலியாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து