முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் 7வது புத்தகத் திருவிழாவில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் நடத்தும்; 7வது ஆண்டு பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை நகராட்சித்திடலில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, துவக்கி வைத்தார்.

புத்தக திருவிழா

அதனைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புத்தகத் திருவிழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினையும் மாவட்ட கலெக்டர் திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்கள். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியானது தொடர்ந்து புத்தகத் திருவிழா நிறைவு பெறும் நாளான 26.02.2018 அன்றுவரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்நாட்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இப்புகைப்படக்கண்காட்சியினை பார்வையிடலாம். இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்;ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

அதன்படி, பெரம்பலூர் புத்தகத் திருவிழாவிற்கு; பெரம்பலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாதனைகள் குறித்து கண்டுகளித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து