முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.38.37 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.38.37 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகை வந்துள்ளதாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

பயிர்க்காப்பீட்டுத் தொகை

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 2016-17ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை வந்துள்ளது. இதில், நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு 3வது கட்டமாக ரூ.75 லட்சம் வந்துள்ளது.  931 விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும், மக்காச்சோளம் பயிரிட்ட 11,352 பேருக்கு ரூ.38.37 கோடியும், பாசிப்பயறு பயிரிட்ட 9895பேருக்கு ரூ.20.73 கோடியும் காப்பீட்டுத் தொகை வந்துள்து. இந்த காப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தமிழக முதல்வர் வருகிற 25ம் தேதி கோவில்பட்டி வருகிறார். அங்கு ரூ.81.82கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 3வது பைப்லைன் திட்டத்தை துவக்கி வைக்கிறார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,  புதிய திட்டங்களை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ்வாறு ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து