முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அப்ரின் நகர் முற்றுகை: துருக்கி அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

கெய்ரோ, சிரியாவில் குர்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அப்ரின் நகரை முற்றுகையிடவிருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன்  கூறுகையில், ''இனி வரும் நாள்களில், சிரியாவிலுள்ள அப்ரின் நகரை எங்களது படைகள் முற்றுகையிடும்'' என்று கூறினார்.

சிரியாவில் உள்ள குர்து படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய ஒரு மாதம் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களது நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் குர்து அமைப்பினருக்கு, சிரியாவிலுள்ள ஒய்பிஜி குர்துப் படையினர் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

இதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது அந்த நாட்டுக் கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை துருக்கி நடத்தி வருகிறது. இந்த விவகாரம், அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், துருக்கி அதிபர் எர்டோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து