முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாடுகள் பங்கேற்கும் டி-20 கிரிக்கெட் : துவக்க ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் பங்கேற்கின்றனர்.  தொடக்க ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

டி-20 தொடர்...

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வருகிற 24-ம் தேதி இந்த தொடர் முடிகிறது. அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் டி-20 போட்டியில் பங்கேற்கிறது.

தலா 2 முறை...

மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 6-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகள் அனைத்தும் கொழும்பு பிரேமதா ஸ்டேடியத்தில் மின்னொளியில் நடக்கிறது.

போட்டி அட்டவணை:-

1) மார்ச் 6 - இலங்கை vs இந்தியா.

2) மார்ச் 8 - வங்காளதேசம் vs இந்தியா.

3) மார்ச் 10 - இலங்கை vs வங்காளதேசம்.

4) மார்ச் 12 - இந்தியா vs இலங்கை.

5) மார்ச் 14 - இந்தியா vs வங்காளதேசம்.

6) மார்ச் 16 - வங்காளதேசம் vs இலங்கை.

7) மார்ச் 18 - இறுதிப்போட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து