முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷெரீபின் கட்சித் தலைவர் பதவி பறிப்பு: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: முறைகேடாக சொத்து சேர்த்த புகாரில் பதவி இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வகித்து வரும் கட்சித் தலைவர் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, அரசு பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், கட்சித் தலைவர் உள்ளிட்ட வேறு பதவிகளை வகிக்க முடியாது. இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் பதவி வகிக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதை எதிர்த்து எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் கட்சித் தலைராக அவர் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் செல்லாது எனவும் தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து