முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது சிரியா நாட்டு மருத்துவர் வேதனை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்: சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை அரசு படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் அரசுப்படை விமானங்கள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் கடந்த 48 மணிநேரத்தில் நடந்த தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் குழந்தைகள் 1,200 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவின் கவுடா பகுதியில் கடந்த இரு வாரமாக நடத்தப்படும் தாக்குதல் குறித்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பசாம் வேதனையுடன் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறியபோது,” கவுடாவில் பேரழிவு நடந்துக் கொண்டிருக்கிறது. எங்களிடம் மருத்து, உணவு, தங்க இடம் என்று ஏதுவும் இல்லை. அவர்கள் அனைத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். கடை, சந்தை, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் என அனைத்தையும் தாக்குகிறார்கள்.

நான் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து குணமடைந்து அவரை அனுப்பினால் அவர் மீண்டும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

எங்கே சர்வதேச சமூகம், எங்கே ஐக்கிய நாடுகள் சபை, அவர்கள் எங்களை கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் எங்களை சாகும்படி விட்டு விட்டார்கள்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து