முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு பெரும்பான்மை உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் தான் இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான பிரபு நேற்று அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசுஅறுதிப் பெரும்பான்மையுடன் தான் இருக்கிறது என்றும் அ.தி.மு.க அணி தூங்கவில்லை. தினகரன் அணிதான் தூங்குகிறது என்றார். மேலும் தினகரனை சந்தித்த பிரபு, மேலும் சிலர் அணி மாறுவார்கள் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார், யாரும் அணி மாறமாட்டார்கள் என்று கூறினார். தனிப்பட்ட வெறுப்புகளை கட்சி மீதோ, தலைவர் மீதோ காட்டக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து