முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மலைவாழ் இளைஞர் கொலை: காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மனநலம் பாதிக்கப்பட்ட மலைவாழ் இளைஞா் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரிசியை திருடியதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்டவா் ஒருவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல்காந்தி தனது டுவிட்டா் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

வருந்தத்தக்கது

நேற்று கேரளாவில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட  இளைஞா் ஒருவரை அரிசியை திருடியதற்காக காட்டுமிராண்டித்தனமாகக் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்ததக்கது. இது போன்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கது. இதைத் தொடா்ந்து வன்முறைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்பப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து