முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிதாரம் பூசிய பலூன்கள் வெடித்துச் சிதறும் ரஜினி, கமல் மீது ஓ.பி.எஸ் மறைமுக தாக்கு

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள் என்றும், அரிதாரம் பூசிய பலூன்கள் வெடித்துச் சிதறும் என்று ரஜினி, கமல் மீது மறைமுக தாக்கி பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது. பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

இந்த அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா; கட்சியை நடத்துவது தொண்டர்கள். அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஒரு விரல் எம்.ஜி.ஆர், மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம்; அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

வண்ண பலூன்கள்...

மக்களை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்பவர்கள் பேச்சு விரைவில் புஸ்வாணமாகிவிடும் என கூறினார்.  மக்களை காப்பாற்றும் ரட்சகர்கள் போல் ஒருசிலர் வீர வசனம் பேசுகிறார்கள். ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அ.தி.மு.க.வை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன. அவை பார்க்க அழகாக இருந்தாலும், அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கத்தான் போகிறோம்.

வெற்றி காண்போம்...

அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்கவும் இடையில் புகுந்து களவாடவும் சிலர் சதி செய்கின்றனர். அவர்களின் வஞ்சக வலையை அறுத்தெறிந்து கட்சியையும் ஆட்சியையும் ஒற்றுமையாக கட்டிக் காப்போம். எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அது எப்போது வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி காண்போம்.  இவ்வாறுஅவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து