முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட கலெக்டராக விஜயலட்சுமி பொறுப்பேற்பு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக மு.விஜயலட்சுமி, நேற்று (26.02.2018) காலை 10.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 புதிய கலெக்டர்

மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் பொறுப்புகளை ஒப்படைக்க, மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

கோவை மாவட்டத்தின் சார் ஆட்சியராகவும், திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி, பெருநகர சென்னை மாநகராட்சியில் துணை ஆணையர் (சுகாதாரம்) பணியாற்றி, தற்போது மாவட்ட ஆட்சியராக அரியலூரில் பொறுப்பேற்றுள்ளேன்.

அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் மக்கள் நலன் காக்க பணிகள் மேம்படுத்தப்படவும், கல்வித்துறையில் மேலும் வளர்ச்சி அடையவும், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பணிகளை மேற்கொள்வேன் எனவும் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து