முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் கட்டடத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: பிரிட்டன் கட்டடத்தில் சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள்  கூறியதாவது:
லெஸ்டர் நகரப் பகுதியில் ஹிங்லே சாலையில் உள்ள கட்டடத்தில் இந்த சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. வணிக வளாகங்கள், குடியிப்புகள் அதிகம் உள்ள அப்பகுதியில் நிகழ்ந்த இந்த தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில், கடைகள் சிலவும் தீயில் எரிந்து நாசமாகின.

தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்துக்கு பயங்கரவாத செயல் எதுவும் காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. வெடி விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து