எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகரில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் சார்பாக, முத்ரா திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில், மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் ஆகியோர், மொத்தம் 7ஆயிரத்து 921 பயனாளிகளுக்கு ரூ.22.51 கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்கள். அப்போது மத்திய மந்திரி பேசியதாவது:- இந்திய தேசத்தினை உலகளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முன்னோடி தேசமாக உருவாக்கிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாரதப்பிரதமர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் நிலையில், அந்த வளர்ச்சியானது நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வங்கி கணக்குகள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அனைவரும் புதிய வங்கி கணக்குகள் துவங்கிடும் வகையில் ஜன் தன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் இதுவரை ஏறத்தாழ 31 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.
மேலும் தேசிய அளவில் ஆண்டொன்றிற்கு சராசரியாக 5 இலட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் பொதுமக்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் பிரதான் மந்திரி பீமா சுரக்ஷா யோஜனா என்ற விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்க பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சிகளும், வங்கி கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணை பிணையம் இல்லாத வங்கிக் கடன்களாக முத்ரா திட்டத்தின் மூலம்; சிசு திட்;டத்தின் கீழ் ரூ.50ஆயிரம் வரையிலும், கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவிகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்; கீழ் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் சார்பாக மொத்தம் 7921 நபர்களுக்கு ரூ.22.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை சுமார் 10 கோடி நபர்களுக்கு ஏறத்தாழ ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு விலையில்லாமல் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.18ஆயிரம் வழங்கும் திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்போடு புதிதாக தொழில் துவங்க விரும்பும் ஏழை, எளியோருக்கு இணை பிணையம் ஏதுமின்றி கடனுதவிகள் வழங்கிடும் வகையில் முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017ஆம் நிதியாண்டில் 61,482 பயனாளிகளுக்கு ரூ.190.69 கோடி மதிப்பிலும், 2017-2018ஆம் நிதியாண்டில் இதுவரை 53,488 பயனாளிகளுக்கு ரூ.185.83 கோடி மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் சார்பாக மொத்தம் 7921 நபர்களுக்கு ரூ.22.51 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பாக நடப்பு நிதியாண்டில் பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் வருகின்ற மார்ச் 3 மற்றும் 4ஆம் நாட்களில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பல நிறுவனங்கள் வாயிலாக பொறியியல் பட்டதாரிகளையும் மற்றும்; மாநிலத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் பி.உமாமகேஸ்வரி, பாண்டியன் கிராம வங்கி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) கோ.குருநாதன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சியாமளாநாதன், பாரத மாநில வங்கி மண்டல மேலாளர் சேகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் குணசேகரன், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் தெய்வநாயகம் உள்பட அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.