முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: வரலாற்று சாதனை படைத்தவர் ஜெயலலிதா மாநகர செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. புகழாரம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரலாற்று சாதனை படைத்துள்ளார் என ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சூரமங்கலம் பகுதி கழகம் சார்பில் தட்டுகடை மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் டி.தியாகராஜன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெகடாஜலம் எம்.எல்.ஏ., சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பேசியதாவது. புரட்சி தலைவி மறைந்து 1 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது ஆட்சியை அகற்றிட பலர் துடித்து வருகின்றனர்.குறிப்பாக திமுகவில் ஸ்டாலின் இந்த ஆட்சியை அகற்றிவிட்டால் திமுக ஆட்சியை அமைத்துவிடலாம் என்றெல்லாம் அவர் கனவு கண்டார் அது பலிக்கவில்லை.அம்மாவின் ஆன்மாவும்,எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் இந்த ஆட்சியை வழி நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதா இந்த ஆட்சியை சிறப்பான முறையில் நடத்தியுள்ளார். தற்போது தமிழகத்தில் ரூ.1.94 கோடி ரேசன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.கல்வி கற்பதில் கேரள மாநிலம் முதலிடத்தில் இருந்தது. இன்றைக்கு கல்வியில் தமிவகத்தில் பெரும் புரட்சியை ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ரூ.24 ஆயிரம் கோடி கல்விக்கு நிதி ஒதுக்கினார்.மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கைசக்கிள், பாடநூல், நோட்டு புத்தகம், சீருடை என அனைத்தையும் விலையில்லாமல் வழங்கினார். மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட வேப்-டாப் வழங்கினார். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிலும் கிடையாது. இதே போல் கர்ப்பிணி பெண்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருநது ரூ.12 ஆயிரமாக உயர்த்தினார்.. ஏழை பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கியதை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 1 பவுனாக தருவதாக வாக்குறுதி அறித்து ஜெயித்ததும் அவ்வாறே 1 பவுன் வழங்கினார். கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைய விலையில்லா ஆடு,மாடுகள் வழங்கினார். வேலை பார்க்கு கர்ப்பிணி பெண்களுக்கு 9 மாத விடுப்புடன் சம்பளம் வழங்கினார். இப்படியாக மக்களுக்கு செ்ய்த திட்டங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் தம் வழியில் ஆட்சி நடத்தும் அண்ணன் எடப்பாடியும்,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகின்றனர்.வேலைக்கு போகும் பெண்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.20.000 மானியத்தில் ஸ்கூட்டர் வழங்க அறிவித்தார். அண்ணன் எடப்பாடியார் அதை ரூ.25 ஆயிரமாக உயர்த்தினார். சேலம் மாநகருக்கு எடப்பாடியார் எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். உதாரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்விக்க 800 கோடி புதிய பாலங்கள், சாலை பணிகளுக்கு ரூ.142 கோடி என சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே மக்கள் எப்போதும் எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு துணையாக இருக்க வேண்டும்.மீண்டும் திமு க ஆட்சிக்கு வந்தால் கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம், நில அபகரிப்பு ஆகியவை இருக்கும். அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு இது போன்ற இடையூறுகள் இல்லை எனவே பொதுமக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து