முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 285 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 16 ஆயிரத்து 285 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
     ராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையமான கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் மொத்தம்  54 மையங்களில் 139 பள்ளிகளைச் சார்ந்த 7,351 மாணவர்கள்,  8,439 மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 284 மாணவர்கள், 211 மாணவியர்களும் என மொத்தம் 16,285  மாணாக்கர்கள் தேர்வு எழுதுகின்றனர்.   
 மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 58 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர்  கூடுதல் துறை அலுவலர்களாக 58 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 854 ஆசிரியர்களும், சொல்வதை கேட்டு எழுதுபவர்களாக 11 ஆசிரியர்களும், நிலைத்த பறக்கும் படைகளாக 104 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிடும் வகையில் தேவையான போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மாணாக்கர்களுக்கு தேவையான குடிநீர்; வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர வெளியாட்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் நுழையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து