முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பிஜப்பூர், சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் புஜரிகன்கேர் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புஜரிகன்கேர் பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ஜார்கண்ட் பாலமு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த ஒரு தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து