முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஞ்சினில் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்திற்கு திரும்பி விட்டதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

மும்பை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எச்சரிக்கை அலாரம் அடித்ததால் விமானிகள் விமானத்தை அவசரமாக மீண்டும் மும்பைக்கே திருப்பிக் கொண்டு வந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் மும்பைக்கே திரும்பி விட்டதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 188 பயணிகளும் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று விமானம் மூலம் கொல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து