முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலம்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்தியா முழுவதிலும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல வண்ண நிறங்களிலான தூளை வீசியும், வர்ணங்களை பீச்சி அடித்தும் நேற்று மக்கள் கொண்டாடினர்.

உ.பி.யில் கிருஷ்ண ஜென்மபூமியாகக் கருதப்படும் மதுராவில் பிரசித்து பெற்றது ஹோலி பண்டிகை. மதுராவின் பிருந்தாவனில் கிருஷ்ணன் தன் லீலைகள் நடத்திய இடமாகக் கருதப்படுகிறது. இதனால், அங்கு ஹோலி சுமார் பத்து நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் அதை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருந்தார். பிருந்தாவனின் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோயிலில் பலவர்ணங்களிலான செயற்கை மழை கொட்டி கொண்டாடப்படும் ஹோலி உலகப் புகழ் பெற்றது. வட இந்தியாவை வாட்டியக் குளிர் முடிந்து வசந்த காலத்தை தொடங்கும் வகையில் இந்த ஹோலி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை தீபாவளி போல் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து