முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ஹரி பூஷன் என்ற மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த என்கவுண்ட்டர் புஜாரி கேங்கர் வனப்பகுதியில் நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது. சத்திஸ்கர் மாநில சுக்மா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மீனா தன் அறிக்கையில் என்கவுண்டரை உறுதி செய்தார், ஆனால் பலியானோர் எண்ணிக்கை பற்றி தகவல் அளிக்கவில்லை.
கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் தெலங்கானா மா

நிலத்தில் உள்ள கோதகுடம் மாவட்டத்தின் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புப் படையினைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் சிறப்பு தலைமை இயக்குநர் அஸ்வதி தெரிவித்துள்ளார். அப்பகுதியிலிருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து