முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கீழ்குப்பம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் கோ.அரி எம்.பி., சு.ரவி எம்எல்ஏ வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே கீழ்குப்பம் கிராமத்தில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா முன்னட்டு ஏழை ஆண், பெண்களுக்கு சலவை பெட்டி, மற்றும தையல், மிஷன்கள் வழங்கும்நிக்ழ்வு நேற்று 2ந்தேதி நடைபெற்றது. 

நலத்திட்ட உதவி

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகிலாஆறுமுகம் தலைமை தாங்கி பேசினார். ஊராட்சி செயலாளர் என்.மாதவன் வரவேற்று பேசினார். முனிகிருஷ்ணன், வெங்கட், டெய்சி, நாகபூஷணம், நாகராஜன், கருணாபிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி பேசிய பொது கீழ்குப்பம் அதிமுகவின் இரும்பு கோட்டை கடந்த மூன்று நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் அதிக வாக்குகளை தந்தீர்கள்.

அதேபோல் மக்கள் முதல்வர் அம்மா தனது பிறந்த நாளை ஏழை எளியவர்களுக்கு நலஉதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் என்றார் அதனையும் உங்களில் ஒருவராக அகிலாஆறுமுகம் நிறைவேற்றி விட்டார். எனவே, அவரை மனதார பாராட்டுகிறேன். என்று பேசினார். தொடர்ந்து எம்பி.அரி பேசியபோது உங்கள் ஊருக்கு சாலை கால்வாய் வசதி செய்ததரும்படி எம்எல்ஏ ரவி கூறினார் உடனே தொகுதி நிதி 710லட்சம் ஒதுக்கி பணிகள் நிறைவேற்றி இருக்கிறேன். ஏம்எல்ஏ சொன்னது போல் இந்த ஊர் அதிமுகவின் கோட்டை நஉதவிகள் வழங்கி அகிலாஆறுமகத்தை பாராட்டுகிறேன் என்றும் பேசினார்.

அன்னதானம்

பின்னர் இருவரும் ஏழை ஆண், பெண்களுக்கு தையல், சலவை இயந்திரனை தலா 50 பேருக்கும், 500 தாய்மார்களுக்கு தலா வேஷ்டி, சேலை. அன்னதானத்தையும்வழங்கினார்கள் இந்த கொண்டாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஏஜிவிஜயன், மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், தாஸ், பாஸ்கர், பழனி, பிரவின்குமார், நவாஷ்அகமது, பா.பாண்டுரங்கன், முத்தப்பன், அன்பு, ஆனந்தன், பாளையம், உள்ளிட்ட திரளான கட்சியினர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கண்ணையன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து