எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : சட்டசபைதேர்தல் நடந்த மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திரிபுரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் கம்யூனிஸ்ட் கோட்டை அங்கு தகர்ந்துள்ளது. மேகாலயாவில் இழுபறி நிலை நீடிக்கிறது. நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்ச்சித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை...
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டன. திரிபுராவில் பிப்ரவரி மாதம் 18-ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகாலயாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் நேற்று காலை எண்ணப்பட்டன.
கருத்துகணிப்புக்கள்
மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரி கட்சி ஆட்சி நடந்து வந்தது. நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வந்தது.
திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாரதீய ஜனதா இந்த தேர்தலை சந்தித்தது. மேகாலயாவில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்திருந்தன.
முதல்வர் வெற்றி...
நாகாலாந்தில் அங்காமி -2 தொகுதியில் முன்னாள் முதல்வர் நெப்யூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரேன் தொகுதியில் போட்டியிட்ட இன்னாள் முதல்வர் டி.ஆர். ஜிலியாங் வெற்றியும், பா.ஜ.க பிரமுகர்களில் துயி தொகுதியில் ஒய் பட்டான் வெற்றியும் கே.எல். சிஷி, அடாய்ஜூ தோல்வியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்று விட்டது. மேகாலயாவில் ஆட்சி அமைக்க இழுபறி நிலை நீடிக்கிறது. நாகாலாந்தில் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.
கிரண் ரிஜிஜூ நம்பிக்கை
நாகலாந்து மாநிலத்தை ஆட்சி செய்த நாகா மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க. அந்த கூட்டணியை முறித்து கொண்டது. புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை பா.ஜ.க. சந்தித்தது. நேற்று வெளியாகியுள்ள வரும் தேர்தல் முடிவுகளின்படி நாகா மக்கள் முன்னணி 29 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 2 இடங்களில் வெற்றிப்பெற்றது.
என்.பி.எப் தீர்மானம்...
இங்கு ஆட்சி அமைக்க 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், தேர்தலுக்கு முன்னர் தனது கூட்டணி கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சரும், நாகலாந்து மாநில தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜூ, நாகலாந்தில் மற்ற கட்சிகளுடன் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாகா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜூ, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக நாகா மக்கள் முன்னணி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.
நாகலாந்தில் பெற்றுள்ள வெற்றியின் மூலம் வடகிழக்கு இந்தியாவில் பா.ஜ.க. தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிக இடங்களில் ...
60 இடங்களை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் முகுல் சங்மா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், ஐக்கிய குடியரசு கட்சி 6 இடங்களிலும், மக்கள் குடியரசு முன்னணி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தொங்கு சட்டசபை
இங்கு ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், அதிகமான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவை சிறிய கட்சி அல்லது சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் காங்கிரஸ் கேட்டுப் பெற்று அரசு அமைத்தாலும், அந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தற்போது அமையவுள்ள சட்டசபை தொங்கு சட்டசபையாக இருக்கும். கூட்டணி கட்சிகள் திடீரென்று காலை வாரி விட்டால் மீண்டும் பொது தேர்தலை மேகாலயா சட்டசபை சந்திக்க நேரிடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
திரிபுரா
மொத்தம் = 59 / 60
பா.ஜ., கூட்டணி -43
இடதுசாரிகள் - 16
காங். - 0
மற்றவை - 0
நாகாலாந்து
மொத்தம் = 60 / 60
என்.பி.எப் -29
பா.ஜ.க கூட்டணி - 29
மற்றவை -2
காங். - 0
மேகாலயா
மொத்தம் = 59 / 60
காங்., - 21
என்பிபி - 19
பா.ஜ., - 2
மற்றவை -17.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.