முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாளய்ப்பு முகாம் அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மற்றும், தகவல் தொழில்நுட்பத்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றுவரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம’ 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமின் தொடக்க விழா கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் நலனுக்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல்துறை ஒருங்கிணைப்பில், தலைசிறந்த நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான இளைஞர்களை தங்களது நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்திடும் விதமாக இவ்வேலைவாய்ப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறுகிறது. இம்முகாமின் முதல் நாளில் தலைசிறந்த முன்னனி நிறுவனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் முதல்நாளில் மட்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்து 476 ஆண்கள், ஆயிரத்து 605 பெண்கள் என மொத்தம் 3ஆயிரத்து 81 நபர்கள் பதிவு செய்து கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு தரமான கல்வி மற்றும் கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களது குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியடைவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற உயரிய எண்ணத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
   மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வேலைவாய்ப்பினை அதிகரித்திட ஏதுவாக தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மின்னணு பூங்கா அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கூகுள் நிறுவனத்தின் மூலம் சென்னையில் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரத்திலும் 20 கி.மீ சுற்றளவில் தகவல் தொடர்பு பாதிக்காத வகையில் தெழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த ஏதுவாக கூகுள் லூம் அமைத்திடவும், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள 4ஆயிரம் கிராமங்கள் தேர்வு செய்து கூகுள் நிறுவனத்தின் மூலம் இணைய பயன்பாடு குறித்து பயிற்சி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.
      இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட வேலைவாயப்பு அலுவலகத்தில் 63ஆயிரத்து 106 ஆண்கள்;, 75ஆயிரத்து 394 பெண்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 38ஆயிரத்து 500 நபர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்து 119 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. 435 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆயிரத்து 739 நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்;. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், நாஸ்காம் தலைவர் ஸ்ரீதரன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் கோ.குருநாதன்,ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.அ.அபுபக்கர் சித்திக் உட்பட அரசு அலுவலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து