முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு இயந்திரங்களை ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த பரிந்துரை: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளை எண்ணாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்கெனவே மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள், தற்போது வாக்குச் சாவடி வாரியாக எண்ணப்படுகின்றன. இதன்மூலம் எந்த வாக்குச் சாவடியில் எந்த அரசியல் கட்சிக்கு மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர் என்று பகிரங்கமாகத் தெரிந்து விடும். இதன் மூலம் வெற்றி பெறும் வேட்பாளர்கள், அந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியில் பாரபட்சமாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. இது பல பிரச்சினைகளை உருவாக்கும். எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரி யோகேஷ் குப்தா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் கூறும் போது,
தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவர கடந்த 1998-ம் ஆண்டு முதல் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளை எண்ணாமல், மின்னணு இயந்திரங்களை மொத்தமாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அப்போதே பரிந்துரை செய்துள்ளது என்று தெரிவித்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் கூறும்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒன்றாக கலந்து வாக்குகள் எண்ணும் முறையை கொண்டு வருவதற்கு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, புதிய நடைமுறையை கொண்டு வரும் போது, வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருந்து தகவல்கள் கசியாது என்ற நம்பகத்தன்மை மற்றும் இயந்திரங்களில் முறைகேடு நடத்த முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து