முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் குறித்த எச்.ராஜா கருத்து: மக்களின் அமைதியை குலைத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மக்களின் அமைதியை குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவரை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அரசு அனுமதிக்காது

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நிலையில் வி‌ஷவிதைகளை தூவி அதன் மூலம் ஆதாயம் தேடுகின்ற செயலை அம்மாவின் அரசு அனுமதிக்காது. அம்மாவே அவரது ஆட்சிக் காலத்தில் இது போன்ற செயல்களில் கடுமையாக இருந்துள்ளார்.

நடவடிக்கை எடுப்போம்

அம்மாவின் ஸ்லோகம் அமைதி, வளம், வளர்ச்சி. இதை மையமாக கொண்டுதான் அம்மாவின் அரசு சென்று கொண்டிருக்கிறது. 1921-ல் இருந்து பார்த்தால் தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். இந்த மண்ணில் ஏற்றுக் கொள்ளப்படாத செயல்களை அனுமதிக்க முடியாது. அது ராஜாவாக இருந்தாலும் சரி, ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுப்போம். மக்கள் அனுமதிக்காத இந்த செயல் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

தண்டனை வாங்கி...

எச்.ராஜா தனது ட்விட்டர் கருத்தை வாபஸ் வாங்கி விட்டார். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மக்களின் அமைதியை குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவரை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம். இது தொடர்பாக நாம் இப்போது வழக்கு தொடுத்தாலும் கூட வாபஸ் வாங்கி விட்டோம் என்று சொல்வார்கள். வாபஸ் வாங்கவில்லை என்றால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். தலைவர்களின் சிலைகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு எடுத்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து