முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் ரஷ்ய அதிபர் கொடும்பாவி எரிப்பு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

சிரியாவில் அப்பாவி மக்களையும் பச்சிளங் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் ரஷ்ய ராணுவ பயங்கரவாதிகளை கண்டித்தும் ஐ.நா.சபை உடனே தலையிட்டு சிரியாவில் அமைதி நிலைநாட்ட வலியுறுத்தியும் திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ஏ.ஆர்.நாசர் உசேன் தலைமை தாங்கினார். ஐபிபி மாவட்ட செயலாளர் ஏ.ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்றுபேசினார். மாவட்ட செயலாளர் எச்.ஜமால், மாவட்ட பொருளாளர் எம்.கலிமுல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.நஜீர்அஹமத், நகர செயலாளர் எம்.இ.ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் எஸ்.ஜாகிர், நகர துணைத் தலைவர் ஆர்.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிரியாவில் அப்பாவி மக்களையும், பச்சிளங்குழந்தைகளையும் கொன்று குவிக்கும் ரஷ்ய அதிபர் புதின் கொடும்பாவியும் ரஷ்யாவின் கொடியையும் எரித்து முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கே.அன்சர் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து