எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்ற எச். ராஜாவின் கருத்துக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் குறித்த கருத்துக்கு எச்.ராஜா பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் தின விழா
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மகளிருக்கு தையல் மிஷன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருவரும் நிருபர்களுக்கு அவர்கள் பேட்டி அளித்தனர்.
பல்வேறு திட்டங்கள்...
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
மகளிர் தினத்தையொட்டி பெண்கள் அனைவருக்கும் இதயப்பூர்வான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். அவருடைய வழியில் அம்மா இரு வாகனத்திட்டத்தை அண்மையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு தொடங்கிய இந்த திட்டத்திற்காக 3 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்களை பெண்கள் வழங்கியிருப்பது மிக பெரிய சாதனையாகும். அ.தி.மு.கவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியவரும் ஜெயலலிதா தான் என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:
*திருச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா:?
இந்த சம்பவம் துர்திர்ஷ்வசமானது. குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து அரசு பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது காவல்துறை மாநாட்டில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்...
*பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று தனது ட்விட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளாரே?
தனக்கு தெரியாமல் ட்விட்டரில் தனது உதவியாளர் வெளியிட்டுள்ளதாக எச்.ராஜா கூறியிருக்கிறார். அதற்கு வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார். அவருக்கு தெரியாமல் உதவியாளர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். அவரது. சிலை அகற்றப்பட வேண்டும் என்பது கண்டிக்கத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள எந்த தலைவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டாலும் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை தாக்க முற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் நடவடிக்கை
*நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள்?
இது குறித்து அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
கண்டனத்திற்குரியவை
அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெரியார் குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை. அவருடைய உதவியாளர் தான் பதிவு செய்தார் என்று எச்.ராஜா கூறும் கருத்தும் அபத்தமாக உள்ளது. தனது தவறுக்கு எச்.ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியாக இருப்பவர் தந்தை பெரியார். அவரது பகுத்தறிவு கொள்கைகளால் தான் இன்று சாதாரண மனிதன் கூட முதல்வராக, பொதுவாழ்வில் ஏற்றம் பெறுபவர்களாக இருக்க முடிகிறது. தமிழக மக்களுக்கான சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். அவரைப் பற்றி எச். ராஜா கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
உண்மைத் தன்மை...
எச்.ராஜா தானே பல்டி அடித்து தான் அந்தப் பதிவை போடவில்லை என்று கூறி இருக்கிறார். அதன் உண்மைத் தன்மை என்ன என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். துணிச்சலான கருத்துகளை சொல்லக்கூடியவர் பெரியார் தமிழ்ச்சமுதாயம் வளர்வதற்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் பெரியார். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
பிரபல திரைப்பட இயக்குனர் 'பசி' துரை காலமானார்
22 Apr 2024சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் துரை நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கேரளாவில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை
22 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nb
-
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி: தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இன்று இறங்குகிறார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்
22 Apr 2024மதுரை : மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில்.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
மாசி வீதிகளில் வெகுவிமர்சையாக நடந்த மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
22 Apr 2024மதுரை : உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.