முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2.30 லட்சம் கோடி கடன் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, அரசு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 ஆயிரத்து 63 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் 1.66 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர்.

இவர்கள் மூலம் அரசு வங்கிகளின் வாராக்கடன் ஏறக்குறைய ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடியாக அதிகரித்துவிட்டது. மற்றொரு கேள்வியில் கடந்த 2016-ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 287 கோடியை தள்ளுபடி செய்துள்ளன என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து