முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பரிஷபுரம் துவக்-கப்பள்ளியில் மகளீர் தினவிழா கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

அரக்-கோணம் அடுத்த அம்பரிஷபுரம் கிராம துவக்-கப் பள்ளியில் மகளீர் தினவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்-கோணம் ஒன்றியம், அமபரிஷபுரம் கிராமத்தில் உலக மகளீர் தினம் ஒன்றிய துவகப்பள்ளி கூடத்தில் கொண்டாடப்பட்டது. அரகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை டி.வள்ளி வரவேற்று பேசினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திருமலை முன்னிலை வகித்து பேசினார்.

உலக மகளீர் தினம்

சிறப்பு விருந்தினராக உதவி தொடக கல்வி அலுவலர்கள் பால்ராஜ், மற்றும் ரமணன் ஆகிய இருவர் கலந்து கொண்டு பேசியதுடன் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கபட்ட 15பேருக்கு பரிசுகளையும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் புளியமங்களம் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுதாபிரேம்குமார், ஆசிரியர் பயிற்றுனர் முனுசாமி, பட்டதாரி ஆசிரியர்கள் எபிநேசன், சரவணன், மோசூர் பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி, விஜயா, கிராம ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், உள்ளிட்ட பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவர்களின் கருத்துமிக்க கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வுகளை கிருஷ்ணாபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ் தொகுத்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து