முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் ரஜினி

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : இமயமலை செல்வதாக அறிவித்து விட்டு சென்னையில் இருந்து நேற்று கிளம்பினார் ரஜினிகாந்த்.

சென்னையில் இருந்து விமானத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர் அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். நேற்று காலை போயஸ்கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது பயண திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார். ஆனால், பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு கேள்வியை அவர் தவிர்த்த விதம், சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், கேள்வியை முடிக்கும் முன்பே கையெடுத்து கும்பிட்டு வணக்கம் என கூறி திரும்பி சென்று விட்டார் ரஜினிகாந்த். முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை என்றும் ரஜினி தெரிவித்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து